சென்னையில் வரும் டிசம்பர் 9 மற்றும் 10ஆம் தேதிகளில் இரவில் ஃபார்முலா 4 கார் பந்தயம் நடைபெற உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. தெற்காசியாவில் முதல் முறையாக ஸ்ட்ரீட் சர்க்யூட் ஃபார்முலா 4 பந்தயம் சென்னையில் நடைபெறுகிறது. தீவுத்திடலில் தொடங்கி ஓமந்தூரார் மருத்துவமனை நேப்பியர் பாலம் வழியே 3.5 கிலோ மீட்டருக்கு போட்டி நடத்த முடிவு செய்யப்பட்டுள்ளது.. தமிழ்நாடு விளையாட்டு துறை சார்பில் சென்னை பார்முலா ரேசிங் சர்க்யூட் தொடக்க விழாவில்  விளையாட்டுத்துறை அமைச்சர் உதயநிதி பங்கேற்றுள்ளார்..