சென்னை மாமல்லபுரத்தில் ஜி-20 மாநாட்டின் கூட்டம் ஜூலை 24 முதல் ஜூலை 26 ஆம் தேதி வரை நடைபெற உள்ளது. இதில் கலந்து கொள்வதற்காக வெளிநாட்டு பிரதிநிதிகள் கிண்டியில் உள்ள ஒரு நட்சத்திர ஹோட்டல் மற்றும் மாமல்லபுரத்தில் உள்ள ஒரு நட்சத்திரம் ஹோட்டல் ஆகிய இடங்களில் தங்குகின்றனர். இந்த கூட்டத்தில் 29 வெளிநாட்டு பிரதிநிதிகள் மற்றும் 15 பன்னாட்டு நிறுவனங்களின் பிரதிநிதிகள் ஆகியோர் பங்கேற்க உள்ளனர்.

இதனைத் தொடர்ந்து அவர்கள் தங்கும் ஹோட்டல்கள், பயணம் செய்யும் சாலைகள் மற்றும் கூட்டம் நடைபெறும் இடம் ஆகியவை சிவப்பு மண்டலமாக அறிவிக்கப்பட்டுள்ளது. மேலும் சென்னை பெருநகர காவல் துறைக்கு உட்பட்ட பகுதிகளில் பாதுகாப்பு நலனை கருதி ஜூலை 23 அதாவது இன்று முதல் ஜூலை 26 ஆம் தேதி வரை நான்கு நாட்களுக்கு ட்ரோன்கள் உள்ளிட்ட ஆளில்லாத வான்வழி வாகனங்கள் பறப்பதற்கு தடை விதிக்கப்பட்டுள்ளது.