சென்னையில் உள்ள அனைத்து மாநகர பேருந்துகளிலும் தானியங்கி கதவுகள் பொருத்தப்பட்டு வருவதாக MTC தெரிவித்துள்ளது. அரசுப் பேருந்துகளில் பயணிக்கும் குழந்தைகள், பெண்கள், மாணவர்களின் பாதுகாப்பை உறுதி செய்ய தமிழக அரசு பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகிறது. அந்தவகையில் தற்போதும் பயணிகள் ஏறியவுடன் கதவுகள் தானாக மூடும் வகையில் தானியங்கி கதவுகள் பொருத்தப்பட்டுள்ளது.

ஏற்கெனவே டீலக்ஸ் பேருந்துகளில் தானியங்கி கதவுகள் பொருத்தப்பட்ட நிலையில், தற்போது அனைத்து வகையான பேருந்துகளிலும் கதவுகளை பொருத்த அறிவுறுத்தப்பட்டுள்ளது.