சட்ட விரோத பண பரிவர்த்தனை வழக்கில் கைது செய்யப்பட்டுள்ள அமைச்சர் செந்தில் பாலாஜி நெஞ்சுவலி காரணமாக முதலில் சென்னை ஓமந்தூரார் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். அதன் பிறகு காவேரி மருத்துவமனைக்கு மாற்றப்பட்ட அமைச்சர் செந்தில் பாலாஜிக்கு நேற்று அறுவை சிகிச்சை நடந்து முடிந்தது. இந்நிலையில் மதுரையில் நேற்று நடந்த அதிமுக ஆர்ப்பாட்டத்தில் முன்னாள் அமைச்சர் ஆர் பி உதயகுமார் பேசினார்.

அப்போது, டாஸ்மாக்கில் ஒரு நாளுக்கு ஒரு கோடி என இரண்டு வருடத்தில் 7200 கோடி ரூபாயை ஊழல் செய்துள்ளார். ஊழல் குறித்து கேட்ட நமக்கே நெஞ்சு வலி வருகின்றது. ஊழல் செய்த செந்தில் பாலாஜிக்கு நெஞ்சு வலி வராதா?மலை பாதிப்பை ஆய்வு செய்யாமல் முதல்வர் கலைஞர் கோட்டம் திறக்க திருவாரூர் சென்று விட்டார். முதல்வர் ஸ்டாலின் தமிழ்நாட்டின் பெயரை கலைஞர் நாடு என்று மாற்றுவார் என்று கூறியுள்ளார்.