செங்கல்பட்டு மாவட்டத்தில் நாளை (07.12.2023) 6 தாலுகாக்களில் உள்ள பள்ளி மற்றும் கல்லூரிகளுக்கு மட்டும் விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. அதன்படி பல்லாவரம், தாம்பரம், வண்டலூர், திருப்போரூர், செங்கல்பட்டு மற்றும் திருக்கழுக்குன்றம் ஆகிய 6 தாலுகாக்களில் உள்ள பள்ளி மற்றும் கல்லூரிகளுக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. மிக்ஜாம் புயல் மழையின் தாக்கத்தால் ஏற்பட்டுள்ள வெள்ளநீர் வழியாததால் மாணவர்கள் நலன் கருதி விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.

ஏற்கனவே மீட்பு பணிகளுக்காக சென்னை மாவட்டத்தில் நாளை பள்ளி மற்றும் கல்லூரிகளுக்கு விடுமுறை அறிவிக்கப்பட்ட நிலையில், செங்கல்பட்டு மாவட்டத்தில் 6 தாலுகாக்களுக்கு மட்டும் விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.