ஹமாஸ்க்கு ஆதரவாக ஏமனில் உள்ள ஹவுதி கிளர்ச்சி குழு செங்கடலில் செல்லும் கப்பல்கள் மீது தாக்குதல் மேற்கொண்டு வருகின்றன. இதுவரை 23 தாக்குதல்கள் ஹவுதி கிளர்ச்சியாளர்களால் நடத்தப்பட்டுள்ளது.

இந்நிலையில் செங்கடலில் மேற்கொள்ளும் தாக்குதலை ஹவுதி கிளர்ச்சியாளர்கள் நிறுத்த வேண்டும் இல்லை என்றால் ராணுவ நடவடிக்கைகளை எதிர் கொள்ள வேண்டிய சூழல் உருவாகும் என்று அமெரிக்கா மற்றும் கூட்டணி நாடுகள் எச்சரித்துள்ளது.

எந்தவிதமான பதிலடி அமெரிக்கா கொடுக்கும் என்பது பற்றி விரிவாக தெரிவிக்கவில்லை ஆனால் ஹவுதி கிளர்ச்சியாளர்கள் மற்றொரு எச்சரிக்கையை அமெரிக்கா மற்றும் அதன் கூட்டணி நாடுகளிடம் இருந்து எதிர்பார்க்க முடியாது என தெரிவிக்கப்பட்டுள்ளது.

அமெரிக்காவுடன் கூட்டணி நாடுகளாக ஜப்பான், ஜெர்மனி, ஆஸ்திரேலியா, பெல்ஜியம், நியூசிலாந்து, டென்மார்க், சிங்கப்பூர், இங்கிலாந்து, இத்தாலி, பக்ரைன், கனடா, நெதர்லாந்து இணைந்துள்ளன.