சுலப் இன்டர்நேஷனல் அமைப்பின் நிறுவனர் பிந்தேஷ்வர் பாடக் (80) நெஞ்சுவலியால் காலமானார். சுலப் இன்டர்நேஷனல் அமைப்பு மூலம் நாடு முழுவதும் 13 லட்சம் வீடுகளில் நவீன கழிப்பறைகளைக் கட்டிக் கொடுத்தவர் பிந்தேஷ்வர். இந்நிலையில், இன்று பிந்தேஷ்வருக்கு நெஞ்சுவலி ஏற்பட்டதை அடுத்து உடனடியாக டெல்லி எய்ம்ஸ் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். அங்கு சிகிச்சை பலனின்றி மருத்துவமனையிலேயே அவர் உயிர் பிரிந்தது.