ஸ்பைஸ் ஜெட் விமான நிறுவனம் சுதந்திர தின சிறப்பு சலுகையாக ஆகஸ்ட் 14 முதல் 20 வரை விமான டிக்கெட் முன்பதிவு செய்யலாம் என்று அறிவித்துள்ளது. தன்னுடைய பயணிகளுக்காக இந்த சிறப்பு விற்பனையை அறிவித்துள்ளது. இதில் விமான பயண டிக்கெட்டுகளை வெறும் 1515 ரூபாய்க்கு முன்பதிவு செய்யலாம். இந்த டிக்கெட் தொகையில் அனைத்து வரிகளுமே அடங்கிவிடும் இதன் மூலம் பிடித்த இருக்கையை பயணிகள் வெறும் 15 ரூபாய்க்கு தேர்வு செய்யலாம்.

இத்தோடு 2000 ரூபாய் வவுச்சரும் கிடைக்கும். இந்த டிக்கெட் முன்பதிவின் மூலம் இன்று முதல் மார்ச் 30 வரை பயணம் செய்யலாம் என்று அன் நிறுவனம் அறிவித்துள்ளது. அடுத்த வருடத்திற்கான மார்ச் மாதம் வரையிலான பயணங்களுக்கு டிக்கெட்டை முன்பதிவு செய்யலாம் முதலில் வருபவர்களுக்கு முன்னுரிமை என்ற அடிப்படையில் டிக்கெட்டுகள் விற்பனை செய்யப்பட்டு வருகிறது.