நாடாளுமன்றத்தில் பேசிய பிரதமர் மோடி, தலைவர் அவர்களே…  தங்களின் நடவடிக்கைகள் எண்ணங்கள் மூலமாக ராஜாவாகி விட்டவர்களுக்கு ஒரு ஏழையின் மகன் இங்கே அமர்ந்திருப்பது கவலையாக இருக்கிறது. ஆனால் இவர்கள் எல்லாம் பெயர் மட்டுமே வைத்திருப்பவர்கள், நாங்கள் வேலை செய்பவர்கள். சில விஷயங்களை பல ஆண்டுகளுக்கு பிறகு இப்போது சொல்ல நேரம் கிடைத்துள்ளது.

நேற்று இங்கு இதயத்தில் இருந்து பேசும் பேச்சும் வந்தது. அவர்களுடைய மூளையின், மனதின்…. நிலை என்ன என்பதை நாடு பல வருஷங்களாக தெரிந்து கொண்டு இருக்கின்றது. ஆனால் இப்போது அவர்களுடைய இதயம் என்ன சொல்ல்கின்றது ? என்பதும் நமக்கு தெரிந்துவிட்டது.  இவர்களுக்கு மோடி மீது அன்பு அதிகம். ஏனென்றால் 24 மணி நேரமும் இவர்கள்  கனவிலும் கூட மோடி தான் வருகிறார்.

அவர்கள் நீரை அருந்தினால் கூட நெஞ்சை பிரித்து காட்டுவார்கள்… பாருங்கள் எங்கள் நெஞ்சில் இருக்கின்ற மோடியின் மீது தண்ணீரை ஊற்றிவிட்டோம் என்று சொல்வார்கள். இவர்கள் வாழ்வதற்கு தேடுகின்ற சப்போர்ட்டை பாருங்கள்…. நீரில் மூழ்குபவருக்கு ஏதேனும் ஒரு உதவி போதும்.

ஆனால் ஆகாயத்தில் இருந்து விழுகின்ற மின்னலை கைப்பற்றி, ஏறி விட முடியுமா ?    இவர்கள் ஒரு புகழ்பெற்ற ஒரு பொருளை பலமுறை லான்ச் செய்கின்றார்கள். ஒவ்வொரு முறையும் அது தோல்வி அடைகின்றது. இப்போது மக்களின் வெறுப்பும் – வாக்காளர்களர்களின் வெறுப்பும் இவர்கள் லாஞ்ச் செய்யும் போது விண்ணிற்கு சென்றுவிட்டது என தெரிவித்தார்.