இங்கிலாந்தில் இருந்து துருக்கிக்கு சுற்றுலா சென்ற தம்பதி நேற்று முன்தினம் ஹோட்டல் ஒன்றில் அரை எடுத்து தங்கி உள்ளனர். இந்நிலையில் கணவன் மனைவி இருவர் இடையே சண்டை ஏற்பட்டுள்ளது. இதில் ஆத்திரமடைந்த கணவன் ஸ்குருடிரைவரால் 41 முறை தனது மனைவியைக் குத்தி கொடூரமாக கொலை செய்துள்ளார்.

அறையில் இருந்து அலறல் சத்தம் கேட்டதை தொடர்ந்து ஊழியர்கள் விரைந்து சென்று ரத்த வெள்ளத்தில் கிடந்த பெண்ணைக் கண்டு அதிர்ச்சி அடைந்தனர். இதனை தொடர்ந்து காவல்துறையினருக்கு புகார் அளிக்க விரைந்து வந்த போலீசார் தப்பிக்க முயன்ற கணவனை கைது செய்து விசாரணை மேற்கொண்டனர்.

அப்போது உளவியல் பிரச்சனை காரணமாக மருந்துகள் எடுத்துக் கொள்வதாகவும் போதைப் பொருள் எடுத்துக் கொண்ட பிறகு வாக்குவாதம் ஏற்பட்டு மனைவியை கொன்றதாகவும் ஒப்புக்கொண்டுள்ளார். ஆனால் ஹோட்டல் அறையில் போதைப் பொருளுக்கான தடயங்கள் எதுவும் கிடைக்கவில்லை என்று காவல் துறையினர் தரப்பில் தெரிவிக்கப்பட்டது. தொடர்ந்து இந்த வழக்கு தொடர்பாக விசாரணை நடந்து வருகிறது.