இஸ்ரேல் ஹமாஸ் இடையே கடந்த மாதம் 7 ஆம் தேதி முதல்  தொடர்ந்து போர் நீடித்து வரும் நிலையில் நேற்று காசா பகுதியில் உள்ள மருத்துவமனைக்குள் இஸ்ரேல் படையினர் அதிரடியாக நுழைந்து சோதனை மேற்கொண்டனர்.

ஏற்கனவே மருத்துவமனைக்கு தேவையான சுகாதார தேவைகள் கிடைக்கப்பெறாமல் ஏராளமான உயிரிழப்புகள் ஏற்பட்டதாக மருத்துவர்கள் தெரிவித்திருந்தனர். இந்நிலையில் இஸ்ரேல் படை மருத்துவமனைக்குள் நுழைந்த பிறகு தண்ணீரும் ஆக்ஸிஜனும் தடைபட்டதாக மருத்துவமனை நிர்வாகம் தெரிவித்துள்ளது.