சீனாவின் ஷான்ஜி மாகாணத்தில் தனியாருக்கு சொந்தமான நிலக்கரி சுரங்க நிறுவனம் அமைந்துள்ளது. இந்த ஐந்து மாடி அலுவலகத்தில் இன்று அதிகாலை தீ விபத்து ஏற்பட்டுள்ளது. இரண்டாவது தளத்தில் ஏற்பட்ட தீயானது வேகமாக பரவத் துவங்கியுள்ளது. இதனால் பணியாளர்கள் தங்களது உயிரை காப்பாற்றிக்கொள்ள அலறி அடித்துக் கொண்டு அலுவலகத்தை விட்டு வெளியேறினர்.

சிலர் நெருப்புக்கு இடையே சிக்கிக் கொண்ட நிலையில் தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த தீயணைப்புத் துறையினர் மீட்பு பணியில் ஈடுபட்டனர் இந்த தீ விபத்தில் முதற்கட்ட தகவலாக 19 பேர் உயிரிழந்தது கூறப்பட்டது. ஆனால் தற்போது உயிரிழப்புகள் எண்ணிக்கை 26க்கு உயர்ந்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.