தமிழகத்தில் வங்கக்கடல் பகுதியில் இன்று புதிய காற்றழுத்த தாழ்வு பகுதி உருவாகியுள்ளது. இதனால் தனுஷ்கோடி பகுதியில் வழக்கத்தை விட கடல் சீற்றம் அதிகரித்து காணப்படுகிறது. எனவே சுற்றுலாப் பயணிகள் அங்கு செல்ல தடை விதிக்கப்பட்டுள்ளது. பல இடங்களிலும் இருந்து சுற்றுலாவிற்கு வந்த வாகனங்களை போலீசார் தடுத்து நிறுத்தி, திருப்பி அனுப்பி வருகின்றனர்.

இதனால் சுற்றுலா பயணிகள் பலரும் ஏமாற்றத்துடன் திரும்பிச் சென்றனர். அதிகாரிகள் நேரில் சென்று ஆய்வு செய்த பிறகு சுற்றுலாப் பயணிகள் அனுமதிக்கப்பட உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.