சர்வதேச அளவில் புகழ்பெற்ற சுற்றுலா தளமாக நீலகிரி மாவட்டம் விளங்குகிறது. இங்கு கோடை காலத்தில் ஏராளமான சுற்றுலா பயணிகள் வருகை புரிவார்கள். இதை முன்னிட்டு ஊட்டியில் ஒவ்வொரு வருடமும் மே மாதத்தில் மலர் கண்காட்சி நடைபெறும்.

அந்த வகையில் நடப்பாண்டில் ஊட்டியில் உள்ள அரசு தாவரவியல் பூங்காவில் 126-வது மலர் கண்காட்சி நடைபெற இருக்கிறது. இந்த கண்காட்சி மே 10-ம் தேதி முதல் 20-ம் தேதி வரை நடைபெறும் என மாவட்ட ஆட்சியர் தற்போது அறிவித்துள்ளார். மேலும் கண்காட்சி கடந்த வருடம் 7 நாட்கள் நடைபெற்ற நிலையில் இந்த வருடம் 10 நாட்கள் நடைபெற இருக்கிறது.