மதுரை மாவட்டத்திலுள்ள பாறைக்குளம் பகுதியைச் சேர்ந்த நாகராசு என்பவர் கட்டிட வேலை பார்த்து வருகிறார். இவருக்கு செல்வி என்ற உள்ளார். இந்த தம்பதியினரின் மகள் லத்திகா(11) அரசு பள்ளியில் ஆறாம் வகுப்பு படித்து வந்துள்ளார். இந்நிலையில் செல்வியின் தங்கை சூர்யாவின் மகன் பிறந்த நாளை முன்னிட்டு நாகராசு தனது மனைவி மற்றும் மகளோடு ஈரோட்டுக்கு சென்றுள்ளார். அங்கு பிறந்த நாளை கொண்டாடிவிட்டு நேற்று முன்தினம் அவர்கள் கொடிவேரி அணைக்கு சுற்றுலா சென்றனர். அப்போது லத்திகாவும் உறவினர் கருப்பு என்பவரின் மகள் குட்டிமாவும் பவானி ஆற்றில் குளிப்பதற்காக இறங்கியுள்ளனர்.

இருவரும் ஆழமான பகுதிக்கு சென்றதால் தண்ணீரில் மூழ்கியுள்ளனர். இதனை பார்த்து அதிர்ச்சியடைந்த குடும்பத்தினர் இரண்டு பேரையும் காப்பாற்ற முயன்றனர். குட்டிமாவை உயிருடன் காப்பாற்றிய நிலையில், ஒரு மணி நேர போராட்டத்திற்கு பிறகு மயங்கிய நிலையில் லத்திகாவை மீட்டனர். அவர் அரசு மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக கொண்டு செல்லப்பட்டார். அங்கு லத்திகாவை பரிசோதனை செய்த டாக்டர்கள் அவர் ஏற்கனவே உயிரிழந்து விட்டதாக தெரிவித்துள்ளனர். இதுகுறித்து வழக்குபதிவு செய்த போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.