ஈரோடு மாவட்டத்தில் உள்ள கருமாண்டி செல்லிபாளையத்தில் திருமூர்த்தி என்பவர் வசித்து வருகிறார். இவரது மகன் சஞ்சய் அரசு ஆண்கள் மேல்நிலைப் பள்ளியில் 12- ஆம் வகுப்பு படித்து வந்துள்ளார். சஞ்சய் தனது தந்தையிடம் நீச்சல் பழக விரும்புவதாக தெரிவித்தார். இதனால் திருமூர்த்தி தனது மகனை கீழ்பவானி வாய்க்கால் பகுதிக்கு அழைத்து சென்றுள்ளார். இந்நிலையில் நீச்சல் கற்றுக் கொடுத்திருந்த போது ஆழமான பகுதிக்கு சென்றதால் சஞ்சய் தண்ணீரில் இழுத்துச் செல்லப்பட்டார்.

இதனை பார்த்து அதிர்ச்சியடைந்த திருமூர்த்தி அக்கம் பக்கத்தினரின் உதவியுடன் தனது மகனை காப்பாற்ற முயன்றார். ஆனால் அதற்குள் சஞ்சய் தண்ணீரில் மூழ்கி உயிரிழந்தார். இதுகுறித்து அறிந்த போலீசார் அங்கு சென்று சஞ்சயின் உடலை மீட்டு அரசு மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர். இதுகுறித்து வழக்குபதிவு செய்த போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.