கோயம்புத்தூர் மாவட்டத்தில் உள்ள அன்னூர் பகுதியில் தமிழ்வாணன் என்பவர் வசித்து வந்துள்ளார். கடந்த 11 மாதத்திற்கு முன்பு தமிழ்வாணனுக்கு இலக்கியா என்ற பெண்ணுடன் திருமணம் நடைபெற்றுள்ளது. கடந்த 2 மாதங்களுக்கு முன்பு தமிழ்வாணன் சூலூரில் இருக்கும் தனியார் தொழிற்சாலையில் வேலைக்கு சேர்ந்தார். இதற்காக தனது மனைவியுடன் தொழிற்சாலை அருகே வாடகை வீடு எடுத்து தங்கினார்.

சம்பவம் நடைபெற்ற அன்று இலக்கியா கடைக்கு சென்ற நேரம் தமிழ்வாணன் திடீரென தூக்கிட்டு தற்கொலை செய்துள்ளார். இதனையடுத்து வீட்டிற்கு திரும்பி வந்த இலக்கியா தனது கணவர் தூக்கில் சடலமாக தொங்குவதைக் கண்டு கதறி அழுதார். இதுகுறித்து அறிந்த போலீசார் அங்கு சென்று தமிழ்வாணனின் உடலை மீட்டு அரசு மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர். இதுகுறித்து வழக்குபதிவு செய்த போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.