ஆசிய நாடான கஜகஸ்தான் காரகண்டா பகுதியில் சுரங்கங்கள் அதிகமாக உள்ளன. கோஸ்டென்கோ சுரங்கம் ஒன்றை தனியார் நிறுவனம் குத்தகைக்கு எடுத்து அங்கு 250க்கும் மேற்பட்ட பணியாளர்கள் பணிபுரிந்து வந்துள்ளனர்.

இந்நிலையில் நேற்று அந்த சுரங்கத்தில் திடீரென தீ விபத்து ஏற்பட்டுள்ளது. வாயு கசிவால் ஏற்பட்ட இந்த தீ விபத்தில் 32 பேர் பரிதாபமாக உயிரிழந்துள்ளனர். மேலும் மாயமான 14 பேரை மீட்பு குழுவினர் தீவிரமாக தேடி வருகின்றனர். தீ விபத்து தொடர்பாக விசாரணை மேற்கொள்ள உத்தரவிட்ட அரசு இறந்தவர்களுக்காக இரங்கல் தெரிவித்துள்ளது.