இஸ்ரேல் ஹமாஸ் இடையே கடந்த ஏழாம் தேதி தொடங்கி இன்றுவரை 22 நாட்களைக் கடந்து போர் நீடித்து வருகிறது. இந்த போரில் 9000திற்கும் அதிகமானோர் இதுவரை உயிரிழந்த நிலையில் பெண்களும் குழந்தைகளும் அதிகம் பாதிக்கப்படுவதால் போரை உடனடியாக நிறுத்த வேண்டும் என்று உலக நாடுகள் வலியுறுத்தி வருகின்றன.

ஆனால் இஸ்ரேல் போர் நிறுத்த அழைப்பை நிராகரித்து வருகிறது. இந்நிலையில் ஹமாஸ் தங்கள் பிடியில் உள்ள பிணை கைதிகளை விடுவிக்க வேண்டும் என்றால் இஸ்ரேல் சிறையில் உள்ள பாலஸ்தீன கைதிகளையும் விடுவிக்க வேண்டும் என்ற நிபந்தனையை விதித்துள்ளது.