சுதந்திர தின விழாவை முன்னிட்டு தாம்பரம் மற்றும் திருநெல்வேலி இடையே சிறப்பு ரயிலுக்கான பயணச்சீட்டு முன்பதிவு ஆகஸ்ட் 11 அதாவது இன்று முதல் தொடங்குவதாக தெற்கு ரயில்வே அறிவித்துள்ளது. தாம்பரத்திலிருந்து ஆகஸ்ட் 14ஆம் தேதி மாலை 5 மணிக்கு புறப்படும் இந்த சிறப்பு ரயில் மறுநாள் காலை 4.15 மணிக்கு திருநெல்வேலி சென்றடையும்.

அதன்பிறகு மறு மார்க்கமாக திருநெல்வேலியில் இருந்து ஆகஸ்ட் 15ஆம் தேதி மாலை 5.50 மணிக்கு புறப்படும் சிறப்பு ரயில் மறுநாள் காலை 4.10 மணிக்கு தாம்பரம் வந்தடையும். இந்த ரயில் செங்கல்பட்டு, விழுப்புரம், விருதாச்சலம், திருச்சி, திண்டுக்கல், மதுரை, விருதுநகர், சாத்தூர் மற்றும் கோவில்பட்டி வழியாக இயக்கப்படும் எனவும் இதற்கான முன்பதிவு பயணச்சீட்டை இன்று காலை 8 மணி முதல் பெறலாம் என தெற்கு ரயில்வே அறிவித்துள்ளது.