இன்ஸ்டாகிராமில் இளைஞர் ஒருவர் தன் காதலால் தனக்கு கிடைத்த வெற்றியை பெருமிதத்துடன் பகிர்ந்துள்ளார்.

காதலால்  இல்லாத ஒருவனை  சகலமும் கொண்டவனாக  வாழ்வின் உச்சத்திற்கு கொண்டு செல்லவும் முடியும், சகலமும் கொண்ட ஒருவனை ஒன்னும் இல்லாத பைத்தியக்காரனாகவும் மாற்ற முடியும்  என்பதற்கு ஏராளமான  சான்றுகளை நாம் நம் நிஜ வாழ்க்கையில் பார்த்திருப்போம். அப்படி காதலால் தன் வாழ்க்கையில் உயர்ந்த ஒரு நபரை பற்றியதுதான் இந்த செய்தி தொகுப்பு. ரகு என்பவர் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் தன் காதலால் அடைந்த வெற்றியை பகிர்ந்துள்ளார். அதில்,

24 வயதில் நான் என் காதலியை திருமணம் செய்ய முடிவு செய்திருந்தேன். அப்போது அவள் அரசு வேலையில் பணியாற்றிக் கொண்டிருந்தாள். இதுகுறித்து எங்க வீட்டில் பேசும் போது எனக்கு எந்த வேலையும் இல்லாத காரணத்தினால் என் தந்தை தயங்கினார். அப்போது அனைவரது எதிர்ப்பையும் மீறி, இன்னும் இரண்டு வருடத்தில் ரகுவும் அரசு வேலைக்கான தேர்வில் தேர்ச்சி பெற்று கண்டிப்பாக ஒரு வேளையில் அமர்வார் என நம்பிக்கை அளித்து, அடம்பிடித்து என்னை திருமணம் செய்து கொண்டாள்.

எனது மனைவி சூரியா  சொன்னது போலவே, இரண்டு ஆண்டில் அரசு வேலைக்கான  தேர்வில் தேர்ச்சி பெற்று, தற்போது எனக்கு வேலையும் கிடைத்துவிட்டது. என்னுடைய மனைவி ஒரு இரும்பு பெண்மணி அவளால் தான் இத்தனையும் சாத்தியமானது என பெருமிதத்துடன் தனது வெற்றியை இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பகிர்ந்துள்ளார்.