வார இறுதி நாட்களான ஆக.12,13 மற்றும் சுதந்திர தினமான ஆக. 15ம் தேதி விடுமுறை என்பதால், வெளியூர் செல்வோருக்கு ஏதுவாக, சென்னை, திருச்சி, மதுரை, கோவை, நெல்லை உள்ளிட்ட முக்கிய நகரங்களில் இருந்து சுமார் 1100 சிறப்பு பேருந்து இயக்கப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில் விடுமுறை கூட்ட நெரிசலை சமாளிக்க தாம்பரம் – நெல்லை சிறப்பு ரயில்கள் இயக்கப்படவுள்ளது. இன்று  முதல் 15ஆம் தேதி வரை தொடர் விடுமுறையையொட்டி, சிறப்பு விரைவு ரயில் இயக்கப்படவுள்ளது.

இன்று  (06051) தாம்பரத்தில் மாலை 5 மணிக்கு புறப்பட்டு மறுநாள் காலை 4:15 மணியளவில் திருநெல்வேலி சென்றடையும். (06052) திருநெல்வேலியில் 12ஆம் தேதி மாலை 5:50 மணி அளவில் புறப்படும் ரயில் மறுநாள் காலை 4:10 மணியளவில் தாம்பரம் சென்றடையும். இந்த ரயில் விழுப்புரம், திருச்சி, திண்டுக்கல், மதுரை, விருதுநகர் உள்ளிட்ட முக்கிய ரயில் நிலையங்களில் நிற்கும்.