தூத்துக்குடி மாவட்டத்தில் உள்ள ஆழ்வார் திருநகரி வட்டார சுகாதார மேற்பார்வையாளர் சோமசுந்தரம் தலைமையில் சுகாதார ஆய்வாளர்கள் தியாகராஜன், அஸ்வின், ஜேசுராஜ், மகேஷ் குமார், ஞானராஜ், சுனில் தர்ஷன் உள்ளிட்டோர் பேய்குளத்தில் இருக்கும் கடைகளில் திடீரென சோதனை நடத்தினர்.

அப்போது 7 கடைகள் சுகாதாரமற்ற முறையில் இருந்தது தெரியவந்தது. இதனால் கடை உரிமையாளர்களுக்கு அதிகாரிகள் அபராதம் விதித்தனர். இதனையடுத்து கடைகளை சுகாதாரத்துடன் வைக்க வேண்டும், காலாவதியான பொருட்களை விற்பனை செய்வதை தவிர்க்கவும் என கடை உரிமையாளர்களுக்கு அதிகாரிகள் அறிவுரை வழங்கியுள்ளனர்.