தூத்துக்குடி மாவட்டத்தில் உள்ள கே.பி தளவாய்புரத்தில் உடையான் என்பவர் வசித்து வருகிறார். கடந்த 2017-ஆம் ஆண்டு உடையான் நான்கு வயது சிறுமிக்கு பாலியல் தொந்தரவு அளித்துள்ளார். இதுகுறித்து அறிந்த சிறுமியின் பெற்றோர் புதுக்கோட்டை அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் புகார் அளித்தனர்.

அந்த புகாரின் பேரில் வழக்குபதிவு செய்த போலீசார் உடையானை கைது செய்தனர். இந்த வழக்கினை விசாரித்து தூத்துக்குடி போக்சோ நீதிமன்றம் உடையானுக்கு ஆயுள் தண்டனையும், பத்தாயிரம் ரூபாய் அபராதமும் விதித்து உத்தரவு பிறப்பித்தது.