நாம் தமிழர் கட்சி ஒருங்கிணைப்பாளர் சீமான் தென்காசி மாவட்டத்தில் கடந்த 2 நாட்களுக்கு முன்பு சுற்றுப்பயணம் செய்தார். கடந்த 16-ந் தேதி அவரும், அவரது கட்சியினரும் சங்கரன்கோவில் பகுதியில் உள்ள ஒரு கல் குவாரியில் திடீரென ஆய்வு செய்வ தற்காக சென்றதாகவும், அப்போது கட்சியினர் கல்குவாரிக்குள் புகுந்து அங்கிருந்த ஒருவரை தாக்கியதாக புகார் எழுந்தது.

இந்நிலையில் நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் மீது போலீசார் வழக்குப்பதிவு செய்துள்ளனர். சீமான் உட்பட அவரது ஆதரவாளர்கள் 13 பேர் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது. இந்த வழக்கில் அனைவரின் மீதும் நடவடிக்கை பாயும் என தெரிகிறது.