இந்தியாவில் பாஜக ஆட்சியின் 9 ஆண்டு கால சாதனையை பொது மக்களிடம் கொண்டு சேர்க்க பல்வேறு நிகழ்ச்சிகளை நடத்தி வருகின்றனர். அதன்படி, இன்று சிவகங்கையில் நலத்திட்டங்கள் குறித்த விளக்க கண்காட்சியில் பாஜக மூத்த தலைவர் ஹெச்.ராஜா கலந்து கொண்டார். இந்நிலையில், செய்தியாளர்களை சந்தித்த பாஜக மூத்த தலைவர் ஹெச்.ராஜா, “தனித்தனியாக இருந்தால் ஒன்றும் செய்ய முடியாது. சீமான் தனது நிலைப்பாட்டை மாற்றிக்கொள்ள வேண்டும். தமிழ் தேசியம் என்ற பிரிவினைவாதத்தை நண்பர் சீமான் கைவிட்டால் அவரிடம் பேசத் தயார்” என தெரிவித்துள்ளார்.