கொரோனா காலகட்டத்தில் சீனியர் சிட்டிசன்கள் பயனடைய வேண்டும் என்பதற்காக ஐசிஐசிஐ வங்கி ICICI Bank golden years FD என்ற சிறப்பு வைப்பு நிதி திட்டத்தை பிரத்தியேகமாக அறிமுகம் செய்தது. அந்த சிறப்பு வைப்பு நிதி திட்டத்தின் கீழ் சீனியர் சிட்டிசன் களுக்கு அதிக வட்டி வழங்கப்பட்டு வந்த நிலையில் இந்த சிறப்பு திட்டத்தை ஐசிஐசிஐ வங்கி தொடர்ந்து நீட்டித்து வருகிறது.

இந்த ஃபிக்ஸட் டெபாசிட் திட்டம் ஏப்ரல் ஏழாம் தேதியுடன் முடிவுக்கு வருவதாக இருந்த நிலையில் இந்த சிறப்பு வைப்பு நிதி திட்டத்தை 2023 ஆம் ஆண்டு அக்டோபர் 31ஆம் தேதி வரை நீட்டித்துள்ளதாக ஐசிஐசிஐ வங்கி அறிவித்தது. இந்த செய்தி சீரியல் சிட்டிசன்கள் மத்தியில் மகிழ்ச்சியை ஏற்படுத்தியது. இந்த திட்டத்தில் முதலீடு செய்து பயன்பெற விரும்பும் சீனியர் சிட்டிசன்களுக்கு அக்டோபர் 31ஆம் தேதி வரை முதலீடு செய்யலாம். எனவே இன்றே கடைசி நாள் ஆகும்.