சீனாவின் வடமேற்கு பகுதியான கிங்காய் மற்றும் கான்சு மாகாணங்களில் நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது. இந்த நிலநடுக்கத்தின் இடிபாடுகளில் சிக்கி 116 பேர் உயிரிழந்ததாக கூறப்பட்டது. மீட்பு பணியும் தொடர்ந்து நடைபெற்று வந்தது.

இந்நிலையில் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 134-க்கு உயர்ந்துள்ளது. அதோடு கடந்த 9 வருடங்களில் ஏற்பட்ட நிலநடுக்கங்களில் இது மிகவும் மோசமானது என அந்நாட்டு அரசு தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.