சீனாவின் ஜிஞ்சியங் உய்குர் சுயாட்சி பகுதிக்குட்பட்ட ஆக்ஸூ மாகாணத்தில் ஆரல் எனும் நகர அமைந்துள்ளது. இந்த நகரில் இருந்து தென்கிழக்கு 16 கிலோமீட்டர் தொலைவில் இன்று அதிகாலை கடுமையான நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது. இந்த நிலநடுக்கமானது ரிக்டர்  அளவுகோலில் 5.8 ஆக பதிவாகியுள்ளது என ஐரோப்பிய மத்திய தரை கடல் நிலநடுக்கவியல் மையம் கூறியுள்ளது.

அதேபோல் கிர்கிஸ்தான் நாட்டின் பீஷ்கேக் நகரில் இருந்து தென்கிழக்கு 766 கிலோ மீட்டர் தொலைவில் அதிகாலை கடுமையான நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது. இது குறித்து தேசிய நிலநடுக்கவியல் மையம் கூறியதாவது, இந்த நிலநடுக்கமானது ரிக்டர் அளவுகோலில் 5.8 ஆக பதிவாகியுள்ளது. மேலும் நிலநடுக்கம் 10 மீட்டர் ஆழத்தில் மையம் கொண்டிருந்தது. இருப்பினும் இதனால் ஏற்பட்ட பொருள் இழப்புகள் உள்ளிட்ட விவரங்கள் எதுவும் உடனடியாக வெளியிடப்படவில்லை என கூறப்பட்டுள்ளது.