சீனாவின் பல்வேறு நகரங்களில் குழந்தைகளுக்கு சுவாச நோய் அதிகரித்து வருவதால் பல மாகாணங்களில் பள்ளிகள் மூடப்பட்டுள்ளன. இந்நிலையில் அமெரிக்காவுக்கும் சீனாவுக்கும் இடையேயான பயணத்திற்கு தடை விதிக்க வேண்டும் என்று ஜோ பைடனிடம் அமெரிக்க எம்பிகள் கடிதம் மூலம் வலியுறுத்தியுள்ளனர்.

அவர்கள் குறிப்பிட்டிருப்பதாவது சீனாவில் இதுவரை அறியப்படாத சுவாச நோய் பரவி வரும் காரணத்தினால் சீனாவுக்கு அமெரிக்காவுக்கும் இடையேயான பயணத்தை கட்டுக்குள் கொண்டு வருமாறு கேட்டுக் கொள்ளப்பட்டுள்ளது. சுகாதார நெருக்கடிகள் பற்றி சீன அரசு பொய் சொல்வதை நீண்ட வரலாறு கொண்டுள்ளது.

கொரோனா தொற்றின் போதும் உண்மையை மறைத்தது என்று குறிப்பிட்டதோடு உலக சுகாதார அமைச்சகம் நடவடிக்கை எடுக்கும் வரை பொறுத்து இருக்காமல் அமெரிக்க மக்களின் ஆரோக்கியத்தையும் நாட்டின் பொருளாதாரத்தையும் கருத்தில் கொண்டு உடனடியாக பாதுகாப்பு நடவடிக்கைகளை எடுக்க வேண்டும் என குறிப்பிடப்பட்டுள்ளது.