ஈராக் நாட்டின் டியால மாகாணத்தில் திடீரென வெடிகுண்டு வெடித்துள்ளது. இதில் காயமடைந்தவர்களை மீட்க அப்பகுதியில் ஏராளமானார் குவிந்துள்ளனர். இதனை சாதகமாக பயன்படுத்திய பயங்கரவாதிகள் அங்கு கூடிய நபர்கள் மீது துப்பாக்கி சூடு தாக்குதல் மேற்கொண்டனர்.

இந்த தாக்குதலில் 11 பொதுமக்கள் உயிரிழந்துள்ளனர். இந்த தாக்குதலுக்கு எந்த அமைப்பும் பொறுப்பேற்காத நிலையில் இதற்கு முன்பாக பலமுறை தாக்குதல் மேற்கொண்ட இஸ்லாமிய தேச ஐஎஸ் பயங்கரவாத அமைப்புதான் இதற்கும் காரணமாக இருக்கலாம் என்று கருதப்படுகிறது.