உகாண்டாவில் ஒரு ஆச்சரியமான சம்பவம் நடந்துள்ளது. சஃபினா நமுக்வாயா (70 வயது) என்ற மூதாட்டி இரட்டைக் குழந்தைகளைப் பெற்றெடுத்தார். அவருக்கு புதன்கிழமை அறுவை சிகிச்சை மூலம் ஆண் குழந்தையும், பெண் குழந்தையும் பிறந்தது. உகாண்டாவின் தலைநகர் கம்பாலாவில் உள்ள மருத்துவமனையில் பிரசவம் நடந்துள்ளது.

மூதாட்டி ஆரோக்கியமாக இருப்பதாக மருத்துவர்கள் தெரிவித்தனர். ஐவிஎஃப் சிகிச்சை மூலம் மூதாட்டி குழந்தையைப் பெற்றெடுத்தார் என்று மருத்துவமனையின் செய்தித் தொடர்பாளர் ஆர்தர் மட்சிகோ தெரிவித்தார்.