இந்தியாவை சேர்ந்த மித்குமார் பட்டேல் என்ற வாலிபர் உயர்கல்விக்காக கடந்த செப்டம்பர் மாதம் 19 ஆம் தேதி லண்டனுக்கு சென்றுள்ளார். இந்நிலையில் அங்கு உறவினர்கள் வீட்டில் தங்கியிருந்த மித்குமார் பட்டேல் நவம்பர் 17 அன்று காணாமல் போய் உள்ளார்.

இது குறித்து அவரது உறவினர்கள் காவல் நிலையத்தில் புகார் அளித்தனர் இதனைத் தொடர்ந்து தேடப்பட்டு வந்த இந்திய வாலிபர் நம்பர் 21 ஆம் தேதி தாமஸ் ஆற்றில் இருந்து சடலமாக மீட்கப்பட்டார். இது குறித்து காவல் துறையினர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.