தமிழ் தேசிய செயல்பாட்டாளரும் தமிழிய பேரியக்க நிறுவனருமான சீதையின் மைந்தன் உடல் நலக்குறைவால் காலமானார். தமிழர் உரிமைகள் பறிபோவதை தடுக்க பல்வேறு போராட்டங்களை முன்னெடுத்த அவர், கச்சத்தீவு குறித்து புத்தகம் எழுதி கச்சத்தீவு தமிழர்களுக்கு சொந்தமான பூர்வ நிலம் என்பதை தக்க வரலாற்றுச் சான்றுகளுடன் நிறுவியவர். அவரது மறைவுக்கு சீமான் மற்றும் வேல்முருகன் உள்ளிட்ட அரசியல் பிரபலங்கள் பலரும் இரங்கல் தெரிவித்து வருகிறார்கள்.