தமிழகத்தில் 25 மாவட்டங்களில் இடி மின்னலுடன் கூடிய மழை பெய்ய வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் எச்சரித்துள்ளது. அதன்படி சென்னை, செங்கல்பட்டு, மதுரை, தஞ்சை, திருவாரூர், நாகை, மயிலாடுதுறை, கடலூர், கள்ளக்குறிச்சி, ராணிப்பேட்டை, விழுப்புரம், மதுரை, தேனி, திண்டுக்கல், தர்மபுரி, சேலம், குமரி, நெல்லை, தென்காசி, நீலகிரி மற்றும் கோவை உள்ளிட்ட மாவட்டங்களில் மழை பெய்யும் என தெரிவித்துள்ளது.