தமிழகத்தில் 1 முதல் 12 ஆம் வகுப்பு மாணவர்களுக்கு தேர்வுகள் முடிவடைந்து கோடைவிடுமுறை விடப்பட்டது. மாணவர்களும் மகிழ்ச்சியாக கோடை விடுமுறையை கொண்டாடி வருகின்றனர். இந்நிலையில் கோடை விடுமுறை முடிந்து வரும் 7ம் தேதி பள்ளிகள் திறக்கப்படவுள்ள நிலையில், தகுந்த சுகாதார மற்றும் பாதுகாப்பு முன்னேற்பாடுகளை மேற்கொள்ள பள்ளிகல்வித்துறை உத்தரவிட்டுள்ளது.

அதில், பள்ளி வளாகங்கள் புதர்கள், குப்பைகளின்றி, தூய்மையாக இருப்பதை உறுதி செய்ய கூறியதோடு, வகுப்பறைகள், கழிவறைகள் தூய்மைப்படுத்தப்பட்டு இருப்பதை உறுதி செய்யுமாறும், மாணவர் சேர்க்கையை தீவிரப்படுத்துமாறும் கூறப்பட்டுள்ளது.