மேஷம் ராசியில் பிறந்தவர்கள், மலைமீது இருக்கும் சிவபெருமானை வணங்கி அபிஷேகம் செய்வதன் மூலம் நன்மைகள் பெறலாம். திருவண்ணாமலை அண்ணாமலையாரை ஒருமுறையாவது சென்று வணங்குவது சிறப்பு.

ரிஷபம் ராசியில் பிறந்தவர்கள், கங்கைகொண்ட சோழபுரம், திருவாரூர், திருவானைக்காவல் போன்ற ஊர்களில் உள்ள சிவபெருமானை வணங்குவது நல்லது. அவ்வாறு இந்த ஊரில் உள்ள கோவில்களுக்கு செல்ல முடியாதவர்கள் ஏதேனும் ஒரு சிவன் கோவிலுக்கு சென்று பஞ்சாட்சர மந்திரத்தை உச்சரித்து பூஜை செய்தால் நல்லது நடக்கும்.

மிதுனம் ராசியில் பிறந்தவர்கள், சிவபெருமானுக்கு கரும்புச்சாறு அல்லது மோர் போன்றவற்றை நெய்வேத்தியமாக படைத்து அபிஷேகம் செய்து வழிபடுவதால் நன்மைகள் நடக்கும். அதேபோன்று திருச்செங்கோடு, சிதம்பரம், காலகஸ்தி போன்ற தளங்களுக்கு சென்று சிவபெருமானை வழிபடுவதும் சிறப்பு.

கடகம் ராசியில் பிறந்தவர்கள், திருக்கடையூர், திருவானைக்காவல், ஜலகண்டேஸ்வரர் போன்ற பகுதிகளில் உள்ள பிரசித்தி பெற்ற சிவன் கோயில்களுக்கு சென்று வழிபடலாம். அதோடு ஏதேனும் சிவாலயங்களுக்கு சென்று வழிபட்டால் பூஜை பொருட்களுடன் பாலும் வாங்கி கொடுத்து பஞ்சாட்சர மந்திரத்தை உச்சரித்து பூஜிப்பது நல்லது.

சிம்ம ராசியில் பிறந்தவர்கள், சிதம்பரம் அல்லது திருவண்ணாமலையில் அமைந்துள்ள சிவபெருமானை வணங்குவது நல்லது. இல்லையென்றால் சிவப்பு சந்தனத்தை பாலில் கலந்து ஏதேனும் ஒரு கோவிலில் சிவனுக்கு அபிஷேகம் செய்தால் நினைத்தது நடக்கும்.

கன்னி ராசியில் பிறந்தவர்கள், உங்களுக்கு பிடித்த சிவாலயத்திற்கு சென்ற பூஜை பொருட்களை வாங்கி கொடுத்து பஞ்சாட்சர மந்திரத்தை உச்சரித்து வழிபடலாம். அதேபோன்று ராசிக்குரிய காஞ்சி ஏகாம்பரேஸ்வரர் கோவிலுக்கும் மதுரை மீனாட்சி கோவிலுக்கும் சென்று வழிபடலாம்.

துலாம் ராசியில் பிறந்தவர்கள், காலகஸ்தி கோவிலுக்கும் மதுரை மீனாட்சி கோவிலுக்கும் சிதம்பரம் கோவிலுக்கும் சென்று வருவது சிறப்பு. அதோடு அருகே இருக்கும் ஏதேனும் ஒரு சிவன் கோவிலுக்கு சென்று அடிக்கடி பல அபிஷேகம் செய்து வழிபடுவது நன்மைகளை தரும்.

விருச்சிகம் ராசியில் பிறந்தவர்கள், திருவானைக்காவல் பகுதியில் வீற்றிருக்கும் சிவபெருமானையும் ஜலகண்டேஸ்வரரையும் வழிபடலாம். அதோடு பிடித்தமான சிவன் கோவிலுக்கு சென்று வெல்லம் கலந்த நீரை நிவேதனம் செய்து வருவதால் நல்லது நடக்கும்.

தனுசு ராசியில் பிறந்தவர்கள் திருப்பரங்குன்றத்தில் வீற்றிருக்கும் சிவபெருமானையும் திருவண்ணாமலையில் உள்ள சிவபெருமானையும் வழிபடுவது சிறப்பு. அதேபோன்று இந்த ராசிக்காரர்கள் பஞ்சாட்சர மந்திரத்தை உச்சரித்தாலே பல நன்மைகள் கிடைக்கும்.

மகர ராசியில் பிறந்தவர்கள் ராசிக்கு உரிய காஞ்சி ஏகாம்பரேஸ்வரரை வணங்கி வருவது நல்லது. பஞ்சாட்சர மந்திரத்தை உச்சரித்து அபிஷேகம் செய்வதால் பல நன்மைகள் கிடைக்கும்.

கும்பம் ராசியில் பிறந்தவர்கள் சிவாலயங்களுக்கு சென்று இளநீர் அபிஷேகம் செய்வது நல்லது. அதேபோன்று ராசிக்கு உரிய காலகஸ்தியில் உள்ள சிவபெருமானையும் சிதம்பரம் கோவிலில் உள்ள சிவபெருமானையும் வணங்குவது சிறப்பு.

மீனம் ராசியில் பிறந்தவர்கள் வேதாரண்யத்தில் உள்ள சிவன் கோவில், ஜலகண்டேஸ்வரர் கோவில்களுக்கு செல்வது நல்லது, அதேபோன்று குங்குமப்பூ கலந்த பாலால் சிவாலயங்களுக்கு சென்று அபிஷேகம் செய்து பஞ்சாட்சர மந்திரத்தை உச்சரித்து வழிபடுவது சிறப்பு.