‘சில்ட்ரன்ஸ் பேங்க் ஆஃப் இந்தியா’ என்ற பெயரில் போலி ரூபாய் நோட்டு அச்சடித்து வெளியிட்ட இருவர் கைது செய்யப்பட்டுள்ளனர். சில்ட்ரன் பாங்க் ஆப் இந்தியா என்ற பெயரில் போலி ரூபாய் நோட்டுக்களை புழக்கத்தில் விட முயன்ற இருவரை  போலீசார் வெள்ளிக்கிழமை கைது செய்தனர். சுமார் ரூ.6.62 லட்சம் கரன்சி பறிமுதல் செய்யப்பட்டது. சித்தூர் மாவட்டம் புங்கனூரை சேர்ந்த கங்கராஜூ மற்றும் அபிநந்தன் ஆகியோர் மகாராஷ்டிராவில் அசல் ரொக்கமாக ரூ.3.5 லட்சம் கொடுத்துவிட்டு ரூ.17 லட்சம் போலி நோட்டுகளை கொடுத்து ஏமாற்றியுள்ளனர்.