இந்தியாவில் பெரும்பாலான மக்கள் சமையல் எரிவாயு சிலிண்டரை பயன்படுத்தி வரும் நிலையில் விலையை கட்டுப்படுத்துவதற்காக அண்மையில் மத்திய அரசு சிலிண்டருக்கு 200 ரூபாய் வரை விலையை குறைத்தது. அதேசமயம் சிலிண்டருக்கு வழங்கப்பட்ட மானிய தொகையும் அதிகரிக்கப்பட்ட நிலையில் சிலிண்டர் பயனர்களுக்கு ஆதார் அங்கீகாரம் கட்டாயமாக்கப்பட்டது.

இதற்கான பணிகள் கடந்த ஒன்னாம் தேதி தொடங்கிய நிலையில் அடுத்த ஒரு மாத காலம் நடைபெறும் என அரசு தெரிவித்துள்ளது. பயன்படுத்தும் வாடிக்கையாளர்கள் அனைவரும் உங்களுடைய ஏஜென்சி இடம் ஆதார் ஒப்புதல் பெற வேண்டும். இனி சிலிண்டர் பெறுவதற்கு ஆதார் அட்டை கட்டாயம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.