ஒடிசா மாநிலத்தைச் சேர்ந்த பெண் ஒருவருக்கு அவரது அண்ணன் தனது மற்றொரு அண்ணனின் மனைவியுடன் தவறான உறவில் இருப்பது தெரியவந்துள்ளது. இதனால் அந்த பெண் தனது அண்ணனிடம் சென்று இந்த பழக்கத்தை விட்டு விட வேண்டும் என்று எச்சரித்துள்ளார். தொடர்ந்து இதுபோன்று செய்தால் வீட்டில் இருப்பவர்களிடம் கூறி விடுவதாகவும் மிரட்டி உள்ளார்.

இந்நிலையில் சம்பவத்தன்று இந்த பெண் அருகில் இருந்த காட்டிற்கு சீலி இலை எடுக்க சென்றுள்ளார். அப்போது அங்கு அந்தப் பெண்ணின் அண்ணன் நின்று கொண்டிருந்தார். அவர் இந்த பெண்ணை பார்த்ததும் தனது நான்கு நண்பர்களை வரவைத்து அங்கே மது அருந்தி உள்ளனர். பின்னர் மது போதையில் தங்கை என்றும் பாராமல் நண்பர்களுடன் சேர்ந்து இந்த பெண்ணை பாலியல் வன்கொடுமை செய்ததோடு இறுதியில் கோடாரியால் தாக்கி கொலையும் செய்துவிட்டனர்.

பின்னர் தனது தங்கையை காணவில்லை என்று காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளார். இது குறித்து வழக்கு பதிவு செய்த போலீசார் விசாரணை மேற்கொண்டபோது காட்டில் பெண்ணின் சடலம் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. இதனை தொடர்ந்து குற்றவாளிகளை கண்டுபிடிக்க தீவிர விசாரணையில் காவல்துறையினர் ஈடுபட்டனர். அப்போது அந்த பெண்ணின் அண்ணன் மீது சந்தேகம் வந்ததால் அவரை கைது செய்து விசாரித்ததில் உண்மையை ஒப்புக்கொண்டு உள்ளார்.