தமிழகத்தில் கடந்த மார்ச் 20ஆம் தேதி சட்டப்பேரவை கூட்டத் தொடர் தொடங்கிய நிலையில் தற்போது துறை வாரியான விவாதங்களும் முக்கிய அறிவிப்புகளும் வெளியிடப்பட்டு வருகின்றன. இந்நிலையில் இன்று சட்டப்பேரவை கூட்டத் தொடரில் பேசிய அமைச்சர் ரகுபதி, சிறைவாசிகள் தங்களின் குடும்ப உறுப்பினர்களிடம் பேச காணொளி வசதி ஏற்படுத்தப்படும் என கூறியுள்ளார்.

சிறைவாசிகளுக்கான தொலைபேசி வசதி கால அளவு 3 நாட்களுக்கு ஒரு முறை, மாதம் பத்து முறை, ஒரு அழைப்புக்கு 12 நிமிடம் என்ற வகையில் உயர்த்தப்படுவதாகவும், அனைத்து மத்திய சிறைகள், பெண்கள் தனி சிறைகள் மற்றும் மாவட்ட சிறை ஆகியவற்றின் நூலக வசதி செய்யப்படும் எனவும் அவர் தெரிவித்துள்ளார்.