தெலுங்கானா மாநிலம் மகபூபநகர் என்ற மாவட்டத்தில் பூரட்டிபள்ளி என்ற கிராமம் உள்ளது. இந்த கிராமத்தில் சிறுவன் ஒருவன் சேவல் ஒன்றை கையில் பிடித்துக் கொண்டு சென்றுள்ளார். இதை பார்த்து அந்த பகுதி மக்கள் சிறுவன் சேவலை திருடி  கொண்டு செல்வதாக நம்பி காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளார்கள். சிறுவனோடு சேர்த்து சேவலையும் காவல் நிலையத்துக்கு கொண்டு சென்றனர்.

அந்த சிறுவன் 18 வயது நிரம்பாததால் பெற்றோரிடம் சிறுவன் ஒப்படைக்கப்பட்ட அதே நேரத்தில் சேவல் யாருடையது என்பதை தெரியாததால் சேவலை காணவில்லை என அதற்குரியவர்கள் புகார் கொடுத்தால் அதனை கொடுக்க காவல்துறையினர் முடிவெடுத்தனர். இதனை தொடர்ந்து சிறையில் சேவலை  அடைத்து வைத்து அதற்கு தேவையான உணவு பொருட்கள் மற்றும் தண்ணீர் கொடுக்க ஏற்பாடு செய்யப்பட்டது. 2021 ஆம் வருடம் பிப்ரவரி 28ஆம் தேதி கொலை வழக்கில் சேவல் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டது குறிப்பிடத்தக்கது