ராஜஸ்தான் தலைநகர் ஜெய்ப்பூரை சேர்ந்த பட்டியலின நபர் ஒருவர், காங்கிரஸ் எம்எல்ஏ கோபால் மீனா மற்றும் ஒரு மூத்த போலீஸ் அதிகாரி மீது பரபரப்பு புகார் அளித்துள்ளார். 51 வயதான அந்த நபர் அளித்துள்ள புகாரில், போலீஸ் சூப்பிரண்டு (டிஎஸ்பி) சிவகுமார் பரத்வாஜ் என்னை தாக்கியதுடன் என் மீது சிறுநீர் கழித்தார். காங்கிரஸ் எம்எல்ஏ கோபால் மீனா தனது காலணிகளை நக்கும்படி என்னை கட்டாயப்படுத்தினார்.

ஜூன் 30 ஆம் தேதியன்று நடந்த சம்பவம் குறித்து, பயத்தின் காரணமாக ஜூலை 27 அன்றே புகார் அளித்ததாகவும் பாதிக்கப்பட்ட அந்த நபர் கூறியுள்ளார். மேலும், சட்டமன்ற உறுப்பினரும், காவல்துறை அதிகாரியும் தனது மொபைல் போனை பறித்துக்கொண்டு, மோசமான விளைவுகளை சந்திக்க நேரிடும் என்று மிரட்டியதாகவும் பாதிக்கப்பட்டவர் குற்றம் சாட்டியுள்ளார்.