ஐதராபாத்தைச் சேர்ந்தவர் லட்சுமி நாராயணா. 28 வயதான இவர் ஒரு ஐடி நிறுவனத்தில் பணிபுரிந்து வருகிறார். தான் சிரித்தால் அழகாக தெரிய வேண்டும் என்பதற்காக தனியார் மருத்துவமனையில் அறுவை சிகிச்சை மேற்கொண்டுள்ளார்.

அப்போது அவருக்கு மயக்க மருத்து செலுத்தப்பட்டது. பின்னர் அறுவை சிகிச்சை முடிந்து சில மணிநேரங்களில் லட்சுமி நாராயணா உயிரிழந்துவிட்டார். அளவுக்கு அதிகமாக மயக்க மருந்து கொடுத்ததே அவரது மரணத்திற்கு காரணம் எனத் தெரியவந்திருக்கிறது.