கேரளாவில் போக்குவரத்து விதி மீறல்களை கண்காணிக்க ரூ. 232 கோடி ரூபாய் செலவில் சாலைகளில் நவீன கேமராக்கள் பொருத்தப்பட்டுள்ளன. கேரளாவில் முதல்வர் பினராயி விஜயனின் அலுவலக காரில் பயணம் செய்த பாதுகாவலர் சீட் பெல்ட் அணியாமல் சென்றதால், முதல்வரின் காருக்கு அபராதம் விதிக்கப்பட்டுள்ளது.

முதல்வரின் காராக இருந்தாலும் போக்குவரத்து போலீசார் அபராதம் விதித்து இருப்பதற்கு பலரும் பாராட்டு தெரிவித்துள்ளனர். டிசம்பர் மாதமே அபராதம் கட்ட நோட்டீஸ் அனுப்ப பட்ட போதிலும் தற்போது வரை அபராதம் செலுத்தவில்லையாம். இது பல்வேறு விமர்சனங்களை தற்போது கிளப்பியுள்ளது.