விஜய் டிவியில் மிகவும் பிரபலமான சீரியல்களில் ஒன்றுதான் பாண்டியன் ஸ்டோர்ஸ். அண்ணன் தம்பி பாசம் மற்றும் கூட்டுக் குடும்பம் என வாழ்க்கையை எடுத்துக்காட்டாக காட்டும் இந்த சீரியலுக்கு மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பு உள்ளது. மூன்று வருடங்களுக்கு மேல் வெற்றிகரமாக ஓடிக் கொண்டிருக்கும் இந்த சீரியல் விரைவில் முடிய உள்ளதாகவும் கூறப்படுகிறது. இந்த சீரியல் முதல் முதலில் செட்டிநாடு வீட்டை காண்பித்திறந்த நிலையில் அதன் பிறகு கதிர் இருந்த மற்றொரு வீட்டை கட்டினர். பிறகு இடம் வாங்கி புதிய வீடு கட்டுவது போல காட்டி தற்போது கிரகப்பிரவேசம் முடிந்து அனைவரும் புதிய வீட்டில் உள்ளனர்.

இந்த புதிய வீடு ஈசிஆரில் உள்ளது. இந்த வீடு குறித்து நடிகை ஹேமா வெளியிட்டுள்ள வீடியோவில், தற்போது பாண்டியன் ஸ்டோர் செட்டுக்கு அழைத்துச் செல்ல போகிறேன் என்று புதிய வீட்டுக்கு வந்துள்ளார். அதிக தூரம் வரவேண்டிய இந்த வீட்டுக்கு வந்து போவது ஊருக்கு வந்து போகிறது மாதிரி இருக்கின்றது. இதுபோன்ற தன்னுடைய அம்மாவின் தங்கச்சி வீடு உள்ளது அதுவும் படபிடிப்பிற்கு பயன்படுத்துகின்றனர் என்று அவர் கூறியுள்ளார். மேலும் வெளியே ஒருவர் சிம்பு அம்மா மாதிரி இருந்தாங்க எனக்கு சரியா தெரியவில்லை இனி இங்கதானே இருக்கப் போகிறோம் போகப் போக பார்த்துக்கலாம் என்று ஹேமா நகைச்சுவையாக பேசியுள்ளார்.