சின்னத்திரையில் முன்னணி நடிகையாக வலம் வந்து கொண்டிருப்பவர் தான் நடிகை காயத்ரி யுவராஜ்.இவர் பார்ப்பதற்கு ஹீரோயினி போல இருந்தாலும் சீரியல்களில் வில்லியாக நடித்ததன் மூலம் ரசிகர்கள் மத்தியில் மிகவும் பிரபலமானார். இவர் நடனத்தின் மீது அதிக காதல் கொண்டிருந்ததால் நடன இயக்குனர் ஒருவரை காதலித்து திருமணம் செய்து கொண்டார்.விஜய் டிவியில் ஒளிபரப்பான நாம் இருவர் நமக்கு இருவர் என்ற தொடரில் ஹீரோவாக நடித்த கதாபாத்திரத்திற்கு தங்கையாக நடித்து ரசிகர்களை கவர்ந்தவர்.  மெல்லத் திறந்தது கதவு,மோகினி களத்து வீடு போன்ற தொடர்களில் நடித்து ரசிகர்கள் மத்தியில் தனக்கென ஒரு இடத்தை பிடித்தவர்.

இவருக்கு ஏற்கனவே ஒரு மகன் உள்ள நிலையில் சமீபத்தில் தான் கர்ப்பமாக இருக்கும் செய்தியை வெளியிட்டிருந்தார். இந்த நிலையில் காயத்ரிக்கு நேற்று பெண் குழந்தை பிறந்துள்ளது. இது குறித்து அவரது கணவர் யுவராஜ் தனது இன்ஸ்டா பக்கத்தில், மகிழ்ச்சிகரமான செய்தி. இன்று அதிகாலை எங்களுக்கு இளவரசி பிறந்திருக்கிறாள். அம்மாவின் பிறந்தநாளை இளவரசியும் பகிர்ந்து கொண்டாள். தாயும் சேயும் நலமாக உள்ளனர். உங்கள் அன்புக்கும் ஆசிர்வாதங்களுக்கும் நன்றி என்று பதிவிட்டுள்ளார்.