பிரபல இயக்குனரும் நடிகருமான சேரனின் தந்தை எஸ்.பாண்டியன் காலமானார். 84 வயதாகும் இவர் கடந்த சில நாட்களாக உடல்நிலை பாதிக்கப்பட்டிருந்த நிலையில் மதுரையில் இன்று அதிகாலை 6.30 மணிக்கு மருத்துவமனையில் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். இவர் சினிமா ஆப்ரேட்டராக பணியாற்றியவர். சோகத்தில் மூழ்கியுள்ள சேரன் குடும்பத்திற்கு திரையுலகை சேர்ந்த பிரபலங்கள் மற்றும் ரசிகர்கள் என பலரும் ஆறுதல் கூறி வருகிறார்கள்.