மனதில் ஏற்பட்ட காயங்களுக்கு அதிக சிகிச்சை தேவை என்று நடிகை சமந்தா கூறியுள்ளார். நேர்காணல் ஒன்றில் பேசிய சமந்தா, மிகவும் கடினமான முடிவாக இருந்தாலும் அந்த நேரத்தில் நான் எடுத்த சரியான முடிவாகவே பார்க்கிறேன். தன்னம்பிக்கை இழந்திருந்த நான் என்னை நானே செதுக்கி கொள்வதற்கான நேரமாக எடுத்துக் கொண்டேன். எனக்கு இப்படி ஒரு விஷயம் இருப்பதை உணர்ந்ததால் தான் என்னால் அதிலிருந்து குணமடைய முடிந்தது என்று உருக்கமாக பேசியுள்ளார்.