தெலுங்கானா மாநிலத்தில் டீக்கடையில் சைரன் ஒலிக்க விட்டபடி  ஆம்புலன்ஸ் ஓட்டுநர் மற்றும் நோயாளி பஜ்ஜி சாப்பிட்ட சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. தெலங்கானா மாநிலம் ஹைதராபாத்தில் தனியார் மருத்துவமனை ஆம்புலன்ஸின் சைரன் ஒலி மற்றும் விளக்குகளை ஒளிரவிட்டவாறு டீக்கடையில் நின்று நோயாளியுடன் சேர்ந்து ஆம்புலன்ஸ் ஓட்டுநர் டீ, பஜ்ஜி சாப்பிட்ட சம்பவம் நேற்று  நடந்துள்ளது.

இந்நிலையில், இதனை பார்த்து அதிர்ச்சியடைந்த போக்குவரத்து காவல்துறையினர், சிக்னலில் நிற்காமல் விரைந்தது இதற்கு தானா? என கேட்டு கடுமையாக எச்சரிகை விடுத்துள்ளனர். மேலும் இதுகுறித்த வீடியோ வெளியிட்டுள்ளார்கள் காவல்துறையினர். இதனையடுத்து, ஆம்புலன்ஸ் ஓட்டுநர் மீது வழக்குப்பதிவு செய்த காவல்துறையினர் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.